கட்டுக்கடங்காத கூட்டம்… சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் : புல்மேடு பகுதியில் அதிகரித்த மருத்துவ முகாம்கள்..!!

கட்டுக்கடங்காத கூட்டம்… சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் : புல்மேடு பகுதியில் அதிகரித்த மருத்துவ முகாம்கள்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் காலம்தான் அதி உச்ச சீசன். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு நாளும் சுமார் 80,000 முதல் 90,000 வரை பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை வந்து அங்கு பம்பை ஆற்றில் புனித நீராடி 5 கிலோ மீட்டர் மலையில் அப்பச்சிமேடு, நீலிமலை, சரங்குத்தி வழியே சன்னிதானத்தை சென்றடைவர். தற்போது கீழ் பகுதியான பம்பையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து மலைக்கு யாத்திரையாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதேபோல பெருவழிப்பாதை எனப்படும் எருமேலியில் இருந்து 35 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து 3-வது பாதையான வண்டி பெரியார்- புல்மேடு வழியாகவும் பக்தர்கள் சன்னிதானத்தை சென்றடையும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 5,000க்கும் அதிகமான பக்தர்கள் புல்மேடு வழியாக சன்னிதானத்தை அடைகின்றனர். புல்மேடு பகுதியில் மலை இறக்கம் என்பதால் பக்தர்கள் அதிகமாக இந்த பாதையையும் பயன்படுத்துகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடிந்து புல்மேடு வழியாக பக்தர்கள் திரும்பும் போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமான பக்தர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து புல்மேடு பாதையை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது புல்மேடு பகுதியை பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதால் அங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புல்மேடு பாதை வழியாக சன்னிதானம் சென்ற கேரளா பக்தர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தார். அதேபோல புல்மேடு பாதையில் பயணித்த போது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்ற 32 வயது இளைஞரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் புல்மேடு பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கும் முகாம்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

4 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

5 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

5 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

5 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

6 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

7 hours ago

This website uses cookies.