மதுரை ; உசிலம்பட்டி திமுக நகர்மன்ற தலைவர் சகுந்தலா, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி திமுக சேர்மன் சகுந்தலா தலைமையில், சகுந்தலாவின் மகனான, திமுக மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய் மற்றும் முன்னாள் திமுக செயற்குழு உறுப்பினர் சோலைரவி உள்ளிட்டோர் தி.மு.கவில் இருந்து விலகி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடியாருக்கு பூங்கொத்து கொடுத்தும், வெற்றிலை மாலை அணிவித்தனர். அதனை பெற்றுக் கொண்ட எடப்பாடியார் அவர்களை வாழ்த்தி வரவேற்றார்.
கடந்த மாதம் உசிலம்பட்டி அமமுக நிர்வாகிகள் கூண்டோடு அமமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருந்த நிலையில், தற்போது திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணையும் நிகழ்வு உசிலம்பட்டியில் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் வேட்பாளராக செல்வி என்பவரை திமுக தலைமை அறிவித்தது. ஆனால், திமுக நகர செயலாளர் தங்கமலை பாண்டியின் மனைவிக்கு தலைவர் பதவி வழங்கப்படாததால், அவரது ஆதரவாளரான சகுந்தலாவை போட்டியிடச் செய்தார். பின்னர், அதிமுக கவுன்சிலர்களின் ஆதரவுடன் அவரை வெற்றியும் பெற வைத்தார்.
இதையடுத்து, உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கபாண்டியை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. இந்த நிலையில், தான் சகுந்தலா தற்போது திமுகவில் இருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உசிலம்பட்டியில் திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.