கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து உருவானது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த திமுகவில் இருந்து பிரிந்து வந்த வைகோ, மதிமுகவை உருவாக்கினார்.
கடவுளை மற, மனிதனை நினை என்று ஒவ்வொரு பெரியார் சிலையிலும், பொறிக்கப்பட்டுள்ள நிலையில், பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வரும் ஒருவராகிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திகழ்ந்து வருகிறார். இதனை நிரூபிக்கும் விதமாகவே அவரும் கறுப்பு துண்டு அணிந்தே தனது அரசியல் தோற்றத்தை வெளிக்காட்டி வருகிறார்.
இதனிடையே, இரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசியலில் கடவுள் மறுப்பு கொள்கைக்கென்று தனியிடம் உண்டு என்றும், ஆனால், கடவுள் மறுப்பு கொள்கை மூலம் மக்களை அடைவது சிரமம் என்று கூறியுள்ள வைகோ, வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை கூறியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், கடவுள் கொள்கை மறுப்பில் இருந்து வைகோ விலகுகிறாரா..? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தோளில் கருப்பு துண்டு இல்லாமல் வைகோ சுவாமி கும்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சுவாமி கும்பிட்டு விபூதி வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில், வைரலாகும் வீடியோ குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.