33 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.1000 கோடி நிலம் மீட்பு : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

33 ஆண்டு சட்டப்போராட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது 33 ஆண்டு கால சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சென்னையில் முக்கிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சென்னை, செம்மொழி பூங்கவுக்கு எதிரே உள்ள மதிப்பு வாய்ந்த 115 ஏக்கர் கிரவுண்ட் நிலத்தை அரசு கைப்பற்றியுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையின் இருபுறமும் தோட்டக்கலைக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளன. அரசு நிலத்தை தனியாரிடம் இருந்து மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சட்ட முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.

1989-ல் அரசின் கட்டுப்பாட்டில் நிலத்தை கொண்டுவர அப்போதைய முதலமைச்சர் கலைஞர் முயற்சிகளை மேற்கொண்டார்.தோட்டக்கலைத்துறை நிலத்தை பெற 1989ல் கலைஞர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்தது. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தோட்டக்கலைத்துறை நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கை தொடர முடிவு செய்யப்பட்டது.

அரசின் முடிவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2007-ல் தள்ளுபடியானது. திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை 2008ல் அனுமதித்து உத்தரவிடப்பட்டது. திமுக அரசின் ஆணையை ரத்து செய்து 1998-ல் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தோட்டக்கலை நிலத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் இடைக்கல ஆணை வழங்கியது. இந்த உத்தரவை அடுத்து, தோட்டக்கலைத்துறை நிலத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்த நிலத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர நில நிர்வாக ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை 2022-ல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் தன்வசம் கொண்டுவந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தொடர் முயற்சியால் வெற்றி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் இதற்கு பாடுபட்ட வருவாய்த்துறை, சட்டத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

3 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

4 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

4 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

5 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

6 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

6 hours ago

This website uses cookies.