டப்பிங் பேசும் போது நடிகர் மாரிமுத்துவுக்கு என்ன நேர்ந்தது? உடன் இருந்த நடிகர் கமலேஷ் சொன்ன ஷாக் தகவல்!!

டப்பிங் பேசும் போது நடிகர் மாரிமுத்துவுக்கு என்ன நேர்ந்தது? உடன் இருந்து நடிகர் கமலேஷ் சொன்ன பகீர் தகவல்!!

சின்னத்திரை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார். இவர் இந்த சீரியலில் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருந்தார்.

இவரது நடிப்பு இந்த சீரியலை எங்கோ கொண்டு சேர்த்தது என கூறலாம். இந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் திருச்செல்வம் கூறுகையில் நடிகர் மாரிமுத்து இறந்தது எல்லாருக்கும் மிகப் பெரிய இழப்பு.

நாங்கள் இன்று ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம். அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு வருவதாக சொன்னார். ஆனால் அதற்குள் அவருக்கு இப்படி ஆகிவிட்டது.

இது எங்களுக்கு மட்டுமல்ல திரையுலகிற்கே ஒட்டுமொத்த இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் எல்லாரும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட ஜீரணிக்கலாம், ஆனால் அவர் நன்றாக இருந்தார். இவ்வாறு திருச்செல்வம் தெரிவித்துள்ளார. மாரிமுத்துவுக்கு 56 வயதாகிறது. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர்.

ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்தார். இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. இவர் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆசை உள்ளிட்ட படங்களிலும் இயக்குநர் வசந்திற்கு உதவி இயக்குநராக இருந்தார்.

கோபத்தில் அவர் பேசும் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கும். அவருடைய உடல் மொழியே மொத்த டயலாக்கையும் பேசும். அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார். இவர் இயக்குநரும் கூட. பூவே உனக்காக, ஆசை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.

இவர் இந்த சீரியலில் பேசும் ஏய் இந்தாம்மா எனும் டயலாக மிகவும் பிரபலம். பெண்ணடிமைத்தனம் செய்யும் இவரது இந்த கேரக்டரை பார்த்தாலே எந்த பெண்ணும் இது போல் ஒரு கணவர் வரக் கூடாது என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வில்லன்களிலேயே கொடூரமான வில்லனாக விளங்கினார் ஆதி குணசேகரன். இந்த இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்கிறார்கள்.

மாரிமுத்து டப்பிங் பேசும் போது மயக்கம் வருவது போல உணருவதாக சக நடிகரான கமலேஷிடம் (ஞானசேகரன் கதாபாத்திரம்) கூறியுள்ளார். சரி வெளியே சென்று காற்று வாங்கிவிட்டு வருவதாக சொன்ன அவர், அங்கிருந்து தனது காரை எடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

நடிகர் கமலேஷ், வெளியே சென்று பார்த்த போது நடிகர் மாரிமுத்து இல்லை என்பதால் உடனே அவருடைய மகளை தொடர்பு கொண்டுள்ளார். அவரது மகளோ, மருத்துவமனைக்கு வர சொல்லியுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற பின்பு தான் எங்களுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது என கண்ணீர் வர தேம்பி தேம்பி நடிகர் கமலேஷ் இதை கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.