டப்பிங் பேசும் போது நடிகர் மாரிமுத்துவுக்கு என்ன நேர்ந்தது? உடன் இருந்த நடிகர் கமலேஷ் சொன்ன ஷாக் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 11:53 am
Marimuthu - Updatenews360
Quick Share

டப்பிங் பேசும் போது நடிகர் மாரிமுத்துவுக்கு என்ன நேர்ந்தது? உடன் இருந்து நடிகர் கமலேஷ் சொன்ன பகீர் தகவல்!!

சின்னத்திரை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார். இவர் இந்த சீரியலில் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருந்தார்.

இவரது நடிப்பு இந்த சீரியலை எங்கோ கொண்டு சேர்த்தது என கூறலாம். இந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் திருச்செல்வம் கூறுகையில் நடிகர் மாரிமுத்து இறந்தது எல்லாருக்கும் மிகப் பெரிய இழப்பு.

நாங்கள் இன்று ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம். அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு வருவதாக சொன்னார். ஆனால் அதற்குள் அவருக்கு இப்படி ஆகிவிட்டது.

இது எங்களுக்கு மட்டுமல்ல திரையுலகிற்கே ஒட்டுமொத்த இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் எல்லாரும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட ஜீரணிக்கலாம், ஆனால் அவர் நன்றாக இருந்தார். இவ்வாறு திருச்செல்வம் தெரிவித்துள்ளார. மாரிமுத்துவுக்கு 56 வயதாகிறது. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர்.

ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்தார். இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. இவர் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆசை உள்ளிட்ட படங்களிலும் இயக்குநர் வசந்திற்கு உதவி இயக்குநராக இருந்தார்.

கோபத்தில் அவர் பேசும் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கும். அவருடைய உடல் மொழியே மொத்த டயலாக்கையும் பேசும். அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார். இவர் இயக்குநரும் கூட. பூவே உனக்காக, ஆசை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.

இவர் இந்த சீரியலில் பேசும் ஏய் இந்தாம்மா எனும் டயலாக மிகவும் பிரபலம். பெண்ணடிமைத்தனம் செய்யும் இவரது இந்த கேரக்டரை பார்த்தாலே எந்த பெண்ணும் இது போல் ஒரு கணவர் வரக் கூடாது என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வில்லன்களிலேயே கொடூரமான வில்லனாக விளங்கினார் ஆதி குணசேகரன். இந்த இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்கிறார்கள்.

மாரிமுத்து டப்பிங் பேசும் போது மயக்கம் வருவது போல உணருவதாக சக நடிகரான கமலேஷிடம் (ஞானசேகரன் கதாபாத்திரம்) கூறியுள்ளார். சரி வெளியே சென்று காற்று வாங்கிவிட்டு வருவதாக சொன்ன அவர், அங்கிருந்து தனது காரை எடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

நடிகர் கமலேஷ், வெளியே சென்று பார்த்த போது நடிகர் மாரிமுத்து இல்லை என்பதால் உடனே அவருடைய மகளை தொடர்பு கொண்டுள்ளார். அவரது மகளோ, மருத்துவமனைக்கு வர சொல்லியுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற பின்பு தான் எங்களுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது என கண்ணீர் வர தேம்பி தேம்பி நடிகர் கமலேஷ் இதை கூறினார்.

Views: - 295

0

0