தனிநபர் மீது ஏன் இவ்ளோ வன்மம்? கர்மா ஒரு பூமராங் : சீண்டும் காயத்ரி ரகுராம்!!

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றதும் அவர் படித்த மேதை அதனால் சரியான நபரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்டது என பலர் பாராட்டி வந்தனர். அது போல் ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசை குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேள்வி கேட்ட போதெல்லாம் சபாஷ் கூறிவந்தனர்.

இந்த நிலையில் ரூ 30 ஆயிரம் கோடி பணம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஒரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதில் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். என்னை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரிடம் இருந்து பிரிப்பதற்காக ஒரு கும்பல் முயற்சித்து வருகிறது என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதற்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி அந்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.

அதில் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்பார்கள் என அதற்கான பட்டியல் முரசொலி நாளிதலில் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் மதுரை மாநகர் சார்பில் காமராஜபுரம் பகுதியில் ஆனந்தன், வில்லாபுரம் பகுதியில் ரகுபதி, சிம்மக்கல் பகுதியிஸல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் வாசு முத்துசாமிஸ ஜீவா நகர் பகுதியில் சரவணன், பெத்தாணியாபுரம் பகுதியில் அப்துல்காதர், அண்ணாநகர் பகுதியில் முகவை க ராமர் உள்ளிட்டோர் பங்கேற்பர் என பெயர்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாளை மாலை சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜெயரஞ்சன் அந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது. பிடிஆர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென ஓரங்கட்டப்படுகிறார் என செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இது குறித்து பாஜவில் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், பி.டி.ஆர், ஒரே அரசியல் கொள்கை பின்னணியில் இருந்து வரும் குடும்பம். தேர்தலை நியாயமாக எதிர்கொண்டு கடினமான பாதையில் வந்த ஒருவர்.

மற்றொரு நபரின் மலிவான அரசியலின் காரணமாக, போலி ஆடியோ மற்றும் வீடியோவைக் கசிவு மூலம் தோல்வி எதிர்கொள்கிறார் புறக்கணிக்கப்படுகிறார், பிறரை மிதித்து மற்றவைகளை அழித்து வளரும் ஒருவரின் மோசமான மனம் ஒரு கெட்ட அரசியல்வாதி, கெட்ட மனிதர். இந்த மேனேஜர் ஆட்சிக்கு வந்தால் இந்த அணுகுமுறை தமிழகத்திற்கு பொதுமக்களுக்கு இதே மாதிரியாக அழிவு நோக்கி இருக்கும்.

இந்த மேனேஜர் ஒரு கட்சியை அழிக்கவில்லை, திராவிட மாடலை அழிக்கவில்லை, எதிர்க்கட்சி கொள்கையை அழிக்கவில்லை, ஆனால் அவர் ஒரு தனி நபரை மட்டுமே அழிக்கிறார், அப்போது கே.டி.ஆர் இப்போது பி.டி.ஆர். இது அரசியல் இல்லை இது குற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குற்றங்களுக்கு மக்களும் அரசாங்கமும் உடன்படக்கூடாது. கர்மா ஒரு பூமராங் அது மீண்டும் தாக்கும் என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

12 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

13 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

14 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

15 hours ago

This website uses cookies.