டிரெண்டிங்

செல்வப்பெருந்தகை பதவி பறிக்கப்படுமா? ஆம்ஸ்டிராங் கொலையில் தொடர்பு? ராகுலுக்கு போன பரபரப்பு கடிதம்.!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எழுதி உள்ள கடிதத்தில், “பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்.
புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்.

அவரை இந்தக் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை எனவும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக செல்வப்பெருந்தகை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை பற்றி கூறுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் பல கோணங்களில் தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக போலீசார் ஸ்காட்லாந்துக்கு இணையான காவல் துறை என பெயர் பெற்றவர்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறை கோட்டை விட மாட்டார்கள். உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

27 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

51 minutes ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

2 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

3 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

5 hours ago

This website uses cookies.