பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா, கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தேர்தலில் வெற்றி பெற முயற்சித்திருப்பதாகவும் அமைச்சர் ரோஜா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தமிழர்கள் அதிகமாக உள்ள ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் காணும் நடிகை ரோஜா திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார். அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் உரிய மரியாதை செய்யப்பட்டது.
மேலும் படிக்க: மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பே இல்ல.. குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்தே ஆகனும் ; ராமதாஸ் வலியுறுத்தல்!
சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நடிகையும், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் தற்போதைய நகரி தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான ரோஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், அருணாச்சலேஸ்வரரின் ஆசிர்வாதத்தோடு பொதுமக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னேறி செல்வதாகவும், கிரிவலத்தை முடித்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கடவுளின் அருள் தனக்கு இருக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், மக்களை நேசிக்கும் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இரண்டாவது முறையாக முதல்வராக ஆக வேண்டும் எனவும், தானும் மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற வேண்டும் என அருணாச்சலேஸ்வரரிடம் வேண்டுதலை வைத்திருப்பதாகவும் கூறினார்.
ஆந்திராவில் தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பின்பும் வன்முறைகள் நடைபெறுவது குறித்தும், அரசு அதிகாரிகள் மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், “பாஜக, தெலுங்கு தேசம் – ஜனசேனா கூட்டணியில் தேர்தலை சந்திப்பதால் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி, எளிதாக தேர்தலில் வெற்றி பெற முயற்சித்திருப்பதாகவும், கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரையும் பணியிட மாற்றம் செய்வது அவர்கள் மீது விசாரணை அமைப்பது, அதிகாரிகளுக்கு அதிக அளவில் மன உளைச்சலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஆந்திரா மக்கள் தெளிவாக இருப்பதாகவும், ஆந்திர மக்களுக்காக பாடுபட்டவர்கள் யார் நல்லது செய்தவர்கள் யார் என அறிந்திருப்பதாகவும், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் அனைவருக்கும் மக்களின் முழு ஆதரவு இருப்பதாகவும் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.