அஜ்ஜனூர் கற்பக விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் வடவள்ளி அஜ்ஜனூர், பரிபாலனா பேஸ் 2ல் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கற்பக விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு தேவ சிவ காம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில் அஜ்ஜனூர் பரிபாலனா பேஸ் 2ல் குடியிருப்போர் பலர் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.இந்த கும்பாபிஷேக நிகழ்வை ஆனைகட்டி ஆசிர வித்யா குருகுலம் சுவாமி சதாத்மானந்த சரஸ்வதி மற்றும் சுவாமி ஜெகதாத்மானந்த சரஸ்வதி ஆகியோர் நடத்தி வைத்தனர்.
மேலும் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் வேள்வி யாகம் நடத்தப்பட்டு மகா கணபதி யோக வேள்வி மகாலட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்று நான்கு கால பூஜைகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் கும்பாபிஷேகம் செய்த தீர்த்தங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குஜன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குமார் மற்றும் பரிபாலனா இல்லத்தை சேர்ந்த பாலாஜி, ரவி, விஸ்வானந்த ஐயர் ஆகியோர் செய்து இருந்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.