மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு திமுக எம்பி கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் மிக முக்கிய நகரங்களில் வேலூரும் ஒன்று. விழுப்புரம் – காட்பாடி இடையே சுமார் 160 கி.மீ. தொலைவுக்கு ரயில் தண்டவாள விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் திட்டம் வரவேற்கப்படக் கூடிய திட்டமாகும். இதற்காக, வேலூர் ரயில்நிலையம் அருகே வசிக்கும் மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை திருச்சி மண்டல ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ரயில் தண்டவாள விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்கள் இருந்தும், இந்திரா நகர், அவுலியா நகர், பூங்காவனத்தம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். ரயில்வே பணிகளுக்கு தேவையான நிலம் இருக்கும் போது, அந்த மக்களை வெளியேற்றுவது தேவையில்லாத ஒன்றாகும். எனவே, நில கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக, ஏழை மக்களுக்காக கோரிக்கை வைக்கிறேன்.
இது தொடர்பாக திருச்சி மண்டல ரயில்வே நிர்வாக அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 19ம் தேதி சென்னை மண்டல ரயில்வே நிர்வாகிகளை சந்தித்த திமுக எம்பி கதிர் ஆனந்த், இந்தக் கோரிக்கைகளை அதிகாரிகள் முன்பு வைத்தார். மேலும், காட்பாடி ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் நின்று செல்லும் கால நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். காட்பாடியில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் என்பதால், ரயிலை நிறுத்தி, இயக்கும் நேரத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.