Categories: Uncategorized @ta

கோவையில் சமூக வலுவூட்டல் முகாம்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது..!!

கோவை: குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் 73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சமூக நீதி அமைச்சகம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை சார்பில், சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு 88 மாற்றுத்திறனாளிகளுக்கு 73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கினர்.

இதில் காதுகேளாதோருக்கான கருவிகள், கேமிங் கிட், மாற்றுத்திறனாளிகளிக்கான மூன்று சக்கர வாகனம், ஆகியவை வழங்கப்பட்டன. இதில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக கருத்தரங்குகளும் விழிப்புணர்வு முகாம்களும் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசாங்கம் அதற்கு உண்டான சலுகைகளை மானியங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.

கொரோனா தாக்கம் குறைந்த பின்பு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குறைந்தது இரண்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் குறைந்தது 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த பலன் சென்றடைவதற்கு உண்டான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்காக தனியாக பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வைத்திருக்கின்றது.

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருக்க கூடிய மாணவர்களுக்கு ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாயும், ஆறிலிருந்து ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாயும், ஒன்பதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 3ஆம் ரூபாயும் வழங்கப்படுகிறது. நம் ஊர்களில் பல மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடையாள அட்டை பெறாமல் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க கடன் உதவியும் வழங்கப்படுகின்றது. எனவே கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் இந்த பலனை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

14 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

14 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

15 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

16 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

16 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

17 hours ago

This website uses cookies.