கோவை: குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் 73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சமூக நீதி அமைச்சகம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை சார்பில், சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு 88 மாற்றுத்திறனாளிகளுக்கு 73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கினர்.
இதில் காதுகேளாதோருக்கான கருவிகள், கேமிங் கிட், மாற்றுத்திறனாளிகளிக்கான மூன்று சக்கர வாகனம், ஆகியவை வழங்கப்பட்டன. இதில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக கருத்தரங்குகளும் விழிப்புணர்வு முகாம்களும் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசாங்கம் அதற்கு உண்டான சலுகைகளை மானியங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.
கொரோனா தாக்கம் குறைந்த பின்பு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குறைந்தது இரண்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் குறைந்தது 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த பலன் சென்றடைவதற்கு உண்டான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்காக தனியாக பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வைத்திருக்கின்றது.
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருக்க கூடிய மாணவர்களுக்கு ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாயும், ஆறிலிருந்து ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாயும், ஒன்பதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 3ஆம் ரூபாயும் வழங்கப்படுகிறது. நம் ஊர்களில் பல மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடையாள அட்டை பெறாமல் உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க கடன் உதவியும் வழங்கப்படுகின்றது. எனவே கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் இந்த பலனை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
This website uses cookies.