விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனது திருமணத்தில் தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், வேட்டை நாய்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை நேரு மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். கட்டட வேலை செய்து வரும் அருண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் மாடுபிடி வீரர்கள் ஆவர். அருண் தனது நண்பர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு காளை, கிடாய் சண்டையில் பங்கேற்கும் ஆட்டு கிடாய், சிப்பிப்பாறை நாய், ஜாதி சேவல் உள்ளிட்ட நாட்டு இன விலங்குகளை வீட்டில் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அருணுக்கும், கல்லுமடம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் இன்று வெள்ளக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்த அருண், தான் குடும்ப உறுப்பினர்களாக வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை. ஆட்டுக்கிடாய் மற்றும் வேட்டை நாய்களையும் பங்கேற்க செய்ய விரும்பினார்.
இதை அறிந்த அவரது நண்பர்கள் ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய், இரண்டு வேட்டை நாய்கள், ஜாதி சேவல் உள்ளிட்ட வீட்டில் வளர்க்கும் நாட்டு விலங்குகளை திருமண மண்டபத்திற்கு நேரில் அழைத்து வந்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் இதைக்கண்டு ஆச்சரியமடைந்தனர்.
மேலும், அருண் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் மணமக்களாக ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக் கிடாய், வேட்டை நாய்கள் மற்றும் சேவலுடனும், தனது நண்பர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
வீட்டில் வளர்க்கும் விலங்குகளையும் குடும்ப உறுப்பினர்களாக நினைத்து திருமணத்திற்கு அழைத்து வந்த மணமக்களின் செயல் காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.