பொறியாளர் தினத்தை முன்னிட்டு SMART CITY விருது : கோவை பொறியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மாநகராட்சி ஆணையர்!!

‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு, வருடத்திற்கு ரூ.200 கோடி வீதம், ஐந்து வருடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த நகரங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

அந்த வகையில் கோவையில் பல திட்டங்கள் கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவையில் பல திட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். ஏரிகளை அழகுபடுத்துதல் மற்றும் புத்துயிர் அளிப்பது மற்றும் மாதிரி சாலைகள் மேம்பாடு ஆகியவை, இந்தியா ஸ்மார்ட் சிட்டி விருதுக்கான நான்காவது பதிப்பில் ‘ கட்டப்பட்ட சூழல் ‘ பிரிவில் கோவை முதலிடம் பெற உதவியது.

இந்த நிலையில் ஒவ்வொரு செப்டம்பர் 15ஆம் தேதி (நாளை) பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. வரும் 15ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.

அதன்படி 2022ஆம் ஆண்டிற்கான SMART CITY விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக கோவை மாநகராட்சி ஆணையர் திரு. பிரதீப் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரும் துணை ஆணையருமான செல்வசுரபி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக மண்டல தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சயில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் விதமாக குளங்கள் புனரமைப்பு மற்றும் சிறந்த மாதிரி சாலை அமைத்தல் பணிக்காக இந்திய அளவில் முதலிடம் மற்றும் தென் மண்டலத்தில் BEST CITYஆக இந்திய அளவில் தேர்வாகும் வகையில் மதிப்பிற்குரிய ஆணையர் பிரதாப் அவர்கள் தலைமையில் சிறப்பாக பணியாற்றியுள்ள கோவை மாநகராட்சி பொறியாளர்கள் அனைவரையும் போற்றி பாராட்டி விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புடன் 1000 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 6 ஆயிரம் பேருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

6 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

8 hours ago

This website uses cookies.