Categories: Uncategorized @ta

KMCH மருத்துவமனையில் அதிநவீன எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்..!!

கோவை: கே.எம்.சி.எச் மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப், எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய நவீன வகை மருத்துவ கருவிகளை தமிழக மின்சாரம் கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மேற்கு மண்டல பகுதியில் அதி நவீன மருத்துவ வசதிகள் கொண்ட முன்னனி மருத்துவமனையாக கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் புதிதாக துவங்கப்பட்ட கே.எம்.சி.எச். மருத்து கல்லூரி பொது மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப்,,எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி.ஸ்கேன் கருவிகள் துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

கே.எம்.சி.எச்.மருத்துவமனை தலைவர் நல்லா ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இதில் துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண்.என்.பழனிசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக மின்சாரம் கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு புதிய மருத்துவக் கருவிகளை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல பகுதி வாழ் மக்களுக்கு கே.எம்.சி.எச்.பல்நோக்கு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், இந்தியாவிலேயே மருத்துவ துறையில் தலைநகராக தமிழகம் இருப்பதாகவும், குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் அளவிற்கு அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட மாவட்டமாக கோவை மாவட்டம் இருப்பதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மக்கள் நல்வாழ்வு துறையின் வாயிலாக பல்வேறு மக்கள்வநலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், இன்னுயிர் காப்போம் என பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

துவக்க விழாவில் மருத்துவகல்லூரி மருத்துவமனை பல்வேறு நிலை நிர்வாகிகள், மருத்துவர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

15 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

16 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

17 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

18 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

19 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

19 hours ago

This website uses cookies.