கோவை புலியகுளம் பகுதியில் புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 23வது ஆண்டாக ஐவர் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.
அதேபோல 23 வது ஆண்டாக பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக புலியகுளம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் விறுவிறுப்பாக கால்பந்து போட்டி நடைபெற்றது.
காலை 6:00 மணி முதல் இரவு 11 மணி வரை மின்னொளியில் இந்த போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து வந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தமாக கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற போட்டியில் 64 குழுவினர் 640 வீரர்கள் விளையாடினர். மொத்தம் 97 ஆட்டம் ஆடப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட போட்டி நடைபெற்றது. இந்த இறுதிக்கட்ட போட்டியில் ஏ.ஜே.எஸ் அணியும் ரத்தினம் கல்லூரி அணியும் மோதின.
அப்போது இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற புள்ளியில் சமநிலையில் நின்றது. பின்னர் டைபிரேக்கர் முறையில் ஏ.ஜே எஸ் அணி மூன்று புள்ளிகளும் ரத்தினம் கல்லூரி அணி ஒரு புள்ளியும் பெற்றது. தொடர்ந்து ஏஜே எஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அந்த அணிக்கு பயாஸ் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.
அதேபோல நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக ஏ ஜே எஸ் அணியின் லோகேஷ் அறிவிக்கப்பட்டார். அதே போல சிறந்த கோல் கீப்பராக ட்ரீம் எஃசி அணியின் சதீஸ் அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன், எம் கே குரூப் ஆஃப் கம்பெனிஸின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன், புனித அந்தோணியார் அருள்தளத்தின் பங்கு தந்தை ராயப்பன், புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குதந்தை ஜார்ஜ் தனசேகர், புனித அந்தோணியார் அருள் தளத்தின் உதவி பங்கு தந்தை ஜெரால்டின்,டி-1 காவல் ஆய்வாளர் செந்தில், ஆலம் விழுதுகள் நிர்வாக இயக்குனர் மீனா ஜெயக்குமார், ஆரிய வைத்திய சாலையின் பொது மேலாளர் ரவீந்திரன்,ரெவா மோட்டார்ஸ்&பம்ப் நிர்வாக இயக்குனர் இந்திரா, வேதா ஸ்போர்ட்ஸ் கிருஷ்ணகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து கேடயங்கள் வழங்கினர்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டிகளை கண்டுகளித்தனர். தொடர்ந்து குழுக்கள் முறையில் பார்வையாளர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.
அதேபோல கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்த 108 ஆம்புலன்ஸ்ற்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.