Categories: Uncategorized @ta

ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தருமபுரி : குமாரசாமி பேட்டையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பெருவிழாவையொட்டி இன்று பூமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

தருமபுரி நகரை அடுத்த குமாரசாமி பேட்டையில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கபட்ட இந்த பெருவிழா தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி இந்தாண்டு வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. நேற்று கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழா இன்று பூமிதி விழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் அங்கு இருந்த மைதானத்தில் தீக்குண்டம் அமைக்கபட்டு அந்த குண்டத்தில் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என பலர் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதனையடுத்து பக்தர்கள் அந்த தீகுண்டத்தில் விவசாயம் செழிக்க அப்பகுதி விவசாய பெருமக்கள் உப்பு மற்றம் தானியங்களை கொட்டினர். மேலும் உடல் நிலை சீராக வேண்டியும், கடன் தொல்லை தீரவும், குழந்தை பாக்கியம் வேண்டி தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சக்தி கரகத்துடன் பூசாரி நடந்து சென்றார்.

வருகிற 4 தேதி வரை நடைபெற உள்ள இந்த பெருவிழாவில் பால் குடம் எடுத்தல், அழகு போடுதல், மயாண கொள்ளை உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்த விழாவையொட்டி விழா குழுவினர் சார்பில் அன்னதானம் நடைபெற உள்ளது. இந்த விழாவை காண தருமபுரி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்தனர்.

KavinKumar

Recent Posts

அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?

அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…

13 minutes ago

கள்ளதொடர்பால் கணவன் கொலை.. இரவு முழுவதும் மனைவி செய்த பகீர் சம்பவம்!!

கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…

54 minutes ago

என்னை மன்னிச்சிடுங்க? சூர்யா சேதுபதி விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…

1 hour ago

காரில் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன்.. காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு : அதிர்ச்சி தகவல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…

1 hour ago

சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…

3 hours ago

This website uses cookies.