திருச்சி : ஸ்ரீரங்கம் மதில் சுவர் மீது கட்டப்பட்டு இருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் பகுதியைச் சோ்ந்த பாலு என்பவரது மகன் வாசுதேவன் (47). இவருக்கு கலைவாணி என்பவருடன் திருமணமாகி சிவனேஸ் ,சிவராஜ் , சினேகா மற்றும் சிவரஞ்சனி என இரண்டு மகள்கள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான வாசுதேவன் கடந்த 6 மாதமாக திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கோவில் மதில் சுவரில் கட்டிட பணியாளராக வேலை செய்து வந்தார். கட்டப்படும் கட்டடத்தில் இவா் நின்று வேலை செய்த சாரம் சரிந்ததில் கீழே விழுந்த வாசுதேவன் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.