Categories: Uncategorized @ta

கருமத்தம்பட்டி நகராட்சி 3வது வார்டை பொது வார்டாக அறிவிக்க வலியுறுத்தல்: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்…கோவையில் பரபரப்பு..!!

கோவை: கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் மூன்றாவது வார்டை பொது வார்டாக அறிவிக்க வலியுறுத்தி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு ஆட்சி அமைத்ததும் பேரூராட்சிகள் எல்லாம் நகராட்சிகள் ஆக அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி பேரூராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் நகராட்சியாக மாற்றப்பட்டது. இதில் 18 வார்டுகளாக இருந்த நிலையில் இப்பொழுது 27 வார்டு ஆக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னி ஆண்டவர் கோவில் 3வது வார்டு எஸ்.சி. வார்ட் ஆக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் 150க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை நாலு மணிக்கு முற்றுகை போராட்டம் ஆரம்பித்து இரவு 12 மணி வரை அதே இடத்தில் அமர்ந்தனர்.

இதையடுத்து ஆணையாளர் இரவு 11 மணி அளவில் நேரில் வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். காலையில் அலுவலகம் வந்தபின் உங்களுக்கு அதிகாரப்பூர்வமான ஆதாரம் காண்பிக்கிறேன் என்றவுடன் 12 மணி அளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து. சமூக ஆர்வலர் அருள் கூறியதாவது, கருமத்தம்பட்டி 3-வார்டு முன் அறிவிப்பின்றி எஸ் சி. வார்ட் ஆக அறிவிக்கப்பட்டு அரசு ஆணை வெளியிட்டது. இதற்கு இப்பகுதி மக்கள் ஆகிய நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்கள் பகுதியில் மட்டும் மொத்தம் 842 ஓட்டுகள் உள்ளன. இதில் 110 எஸ் சி ஓட்டாக உள்ளன.

இதில் மெஜாரிட்டியாக 700க்கும் மேற்பட்ட எங்கள் பகுதி மக்கள் ஓட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களிடம் எந்த ஒரு ஆலோசனையும் இன்றி எஸ் சி. பெண் வார்டாக அரசு அறிவித்தது. இதை நாங்கள் பொதுவாக வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், எலக்சன் கமிஷனையடுத்து இப்பொழுது நகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளோம்.

மனு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஊர்மக்கள் ஒன்றுகூடி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

21 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

21 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

22 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

22 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

23 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

23 hours ago

This website uses cookies.