கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வீரட்டானேஸ்வரரை வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவத்தின் ஒன்பதாவது நாள் உற்சவமாக திருத்தேர் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9ம் தேதி மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ச்சியாக கோவிலில் தினந்தோறும் மாசிமக விழா நடைபெற்று வந்த நிலையில், இன்று 9ம் நாள் உற்சவமான திருத்தேர் விழா நடைபெற்றது.
வீரட்டேஸ்வரர் கோவிலுள்ள சிவானந்த வல்லி உடனுறை வீரட்டேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருத்தேர் ஆனது கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக சுற்றி வந்து தேர் முற்றத்தை அடைந்தது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வீரட்டானேஸ்வரரை வழிபட்டனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.