கேரளா: ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் என்ற இடத்தில் உள்ள ஐடில் கூல் பார் என்ற கடை செயல்பட்டு வருகிறது. ள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது, இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த கடையில், கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநந்தா என்ற மாணவி ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்துள்ளார். சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட சுமார் 15 பள்ளி மாணவர்கள் உள்பட 30- க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கெட்டுப்போன சிக்கன் ‘ஷவர்மாவை’ சாப்பிட்டதால் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கடை உடனடியாக அடைக்கப்பட்ட நிலையில், கடையில் பணிபுரியும் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் கடை உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.
ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷவர்மா எனப்படுவது ரொட்டிக்குள் கோழி இறைச்சித் துண்டுகள், முட்டைக்கோஸ், மசாலா பொருட்கள் சேர்த்து வைத்து பரிமாறப்படும் உணவு.
பெரும்பாலும் இந்த க்ரில்கள் திறந்த வெளியில் தான் இருக்கின்றன. அதுவும் வாகனப் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் சாலையில் இருந்து எழும் தூசிகளுக்கு மத்தியில் இந்த வகை உணவு சாதாரணமாகவே கிருமிகளைக் கொண்டிருக்கும் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், துரித உணவுகளில் பயன்படுத்தும் இறைச்சியின் தரமும், அவை சுத்தப்படுத்தப்படும் முறையும், எத்தனை டிகிரியில் வேகவைக்கப்படுகிறது என்ற அளவும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விஷயம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.