வங்கதேசத்தில் உள்ள புகழ்பெற்ற காளி கோயிலில் இருந்த தங்க கிரீடம் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கதேசம்: வங்கதேசத்தின் சாத்கிராவில் உள்ள ஷ்யாம் நகரில் புகழ் பெற்ற ஜெஸ்ஹோரேஷ்வரி கோயில் உள்ளது. இங்கு முதன்மைக் கடவுளாக காளி அருள் பாலித்து வருகிறார். இந்தக் கோயிலில் காளியின் தலையில் இருந்த கிரீடம் காணாமல் போயுள்ளது. நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்த பூசாரி திலீப் முகர்ஜி, கோயிலில் இருந்து புறப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து, அங்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற நபர்,அம்மன் தலையில் இருந்த கிரீடம் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அவர்கள் கோயிலுக்கு வந்து பார்த்த பிறகு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கோயிலுக்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் துவக்கி உள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்டுள்ள இந்த கிரீடம், கடந்த 2021ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்திற்குச் சென்றபோது பரிசாக கொடுத்த பொருளாகும். இந்த நிலையில், இந்த கிரீடம் காணாமல் போனது இரு நாட்டு உறவில் சற்று திளைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இலங்கையில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் ஆட்சி.. அதிபராக பதவியேற்றார் அனுர குமார திசாநாயக்க..!!
வங்கதேசத்தில் நிலவிய கிளர்ச்சி போராட்டத்தால் அதன் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். மேலும், இந்த போராட்டத்தின் போது, வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஒரு இந்துக் கோயிலில், பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட கிரீடமே காணாமல் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.