உலகம்

இந்து சிறுபான்மையினர் எதிர்ப்பு தொடர்கிறதா? மோடி கொடுத்த தங்க கிரீடம் திருட்டு..

வங்கதேசத்தில் உள்ள புகழ்பெற்ற காளி கோயிலில் இருந்த தங்க கிரீடம் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கதேசம்: வங்கதேசத்தின் சாத்கிராவில் உள்ள ஷ்யாம் நகரில் புகழ் பெற்ற ஜெஸ்ஹோரேஷ்வரி கோயில் உள்ளது. இங்கு முதன்மைக் கடவுளாக காளி அருள் பாலித்து வருகிறார். இந்தக் கோயிலில் காளியின் தலையில் இருந்த கிரீடம் காணாமல் போயுள்ளது. நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்த பூசாரி திலீப் முகர்ஜி, கோயிலில் இருந்து புறப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, அங்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற நபர்,அம்மன் தலையில் இருந்த கிரீடம் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அவர்கள் கோயிலுக்கு வந்து பார்த்த பிறகு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கோயிலுக்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்டுள்ள இந்த கிரீடம், கடந்த 2021ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்திற்குச் சென்றபோது பரிசாக கொடுத்த பொருளாகும். இந்த நிலையில், இந்த கிரீடம் காணாமல் போனது இரு நாட்டு உறவில் சற்று திளைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் ஆட்சி.. அதிபராக பதவியேற்றார் அனுர குமார திசாநாயக்க..!!

வங்கதேசத்தில் நிலவிய கிளர்ச்சி போராட்டத்தால் அதன் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். மேலும், இந்த போராட்டத்தின் போது, வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஒரு இந்துக் கோயிலில், பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட கிரீடமே காணாமல் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.