உலகம்

சொந்தக் கட்சி எம்பிக்களே வைத்த கெடு.. பிரதமருக்கு இப்படி ஒரு நிலையா?

இந்தியா – கனடா கருத்து மோதல் இடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ பதவி விலக வேண்டும் என சொந்தக் கட்சி எம்பிக்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஒட்டாவா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டார். இதற்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது. மேலும், கனடாவில் உள்ள இந்தியத் தூதர்களை தாயகம் திரும்பக் கூறியது கனடா அரசு. இதனையடுத்து, இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளையும் கனடாவை திரும்பப் பெற அறிவுறுத்தியது இந்தியா. இவ்வாறு இந்தியா – கனடா இடையே மனக்கசப்பு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியா திரும்பப் பெற்ற கனடாவுக்கான தூதர் சஞ்சய் வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கு எதிராக கனடா அரசு நடவடிக்கை எடுக்காததே அவர்களை ஊக்குவிப்பதற்கு இணையானது என கருதுகிறேன். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அரசியல் ஆதாயத்திற்காக காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.

மேலும், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தவறு. முழுமையான விசாரணையின் மூலமே உண்மை வெளி வர வேண்டும். நமது நாடு எதையும் திரைமறைவில் செய்யவில்லை. இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரத்தையும் கனடா காண்பிக்கவில்லை” எனத் தெரிவித்த சஞ்சய் வர்மா, கனடா அரசு இந்தியாவை முதுகில் குத்தி விட்டது என கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே கூட்டணி ஆட்சியின் பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூட்டோவின் தலைமையில், கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த டோரண்டோ செயிண்ட் பாலில் தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் ஜஸ்டின் தலைமையில் லிபரல் கட்சி எம்பிக்களின் ரகசியக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க : அயோத்தி விவகாரம் முதல் டெல்லி கலால் வழக்கு வரை.. யார் இந்த சஞ்சீவ் கண்ணா?

இந்தக் கூட்டத்தில், 25 முதல் 30 எம்பிக்கள் வரையில் பிரதமர் ஜஸ்டினிடம் தங்களின் குற்றச்சாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அக்டோபர் 28ஆம் தேதியுடன் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூட்டோ விலக வேண்டும் எனவும் அவர்கள் கெடு விதித்துள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.