இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உச்சத்தில் உள்ளன. இதனால் கடும் அவதிக்கு ஆளான மக்கள், அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிட்டு கைப்பற்றினர். போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கிஇருந்தனர். அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடிய நிலையில், அடுத்த சில நாட்களில் தன் பதவியையும் ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து, அதிபராக ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக தினேஷ் குணவர்த்தனே ஆகியோர் பதவியேற்று உள்ளனர்.
இந்நிலையில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் துவங்கின. பள்ளிகள் திறப்புராணுவம் மற்றும் போலீஸ் இணைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
சீரமைப்பு பணிகள் முடிந்து அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் மாளிகையில் இருந்து ஏராளமான கலைப் பொருட்கள் காணாமல் போயுள்ளன என்றும், அவற்றை எடுத்துச் சென்றவர்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடும் பணி நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் தீவிர போராட்டத்தால், 100 நாட்களுக்கும் மேலாக அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் செயல்பாடு இல்லாமல் முடங்கிக் கிடந்தன.
போராட்டம் காரணமாக இலங்கையில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துாதரக அதிகாரிகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, வெளிநாட்டு துாதரக அதிகாரிகளை அழைத்து, அதிபர் ரணில் விக்ரமசிங்கே விளக்கம் அளித்தார்.
”அமைதியான முறையில் பொதுமக்கள் கூடுவதற்கும், தங்கள் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை,” என, அவர் விளக்கம் அளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.