கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் 6வது நாளாக ரஷ்யாவின் தாக்குதல் நீடித்து வருகிறது. நேற்று சற்று தணிந்த தாக்குதல் இன்று மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது.
கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்கள் மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு, தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
மேலும், அவ்வபோது, உக்ரைன் தூதரகம் மூலம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, கீவ் நகரில் ரஷ்ய படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும், இன்று உடனடியாக வெளியேற வேண்டும்.
அங்கு கிடைக்கும் ரயில் அல்லது சாலை வழியாக எந்த வழியிலாவது வெளியேற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவ் பகுதியில் ரஷ்யா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.