மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே : அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம்!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மக்கள் போராட்டம் அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல நாளும் ஏறிவரும் விலைவாசி, எரிபொருட்கள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு என பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற நிலையில் இலங்கை மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர்.

அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி அதிபர் மாளிகையில் நுழைந்து போராட்டம் நடத்தினர். இதனால் அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இதையடுத்து பிரதமர் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இடைக்கால அதிபராக செய்லபடுவார் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவசர பிரகனடம் பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து கோத்தபயாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். நேற்று ராஜினாமா அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அறிவிப்பை அவர் வெளியிடாமலே இருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகருக்கு கோத்தபய அனுப்பி உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.