மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே : அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 7:50 pm
Gotabaya Resign - Updatenews360
Quick Share

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மக்கள் போராட்டம் அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல நாளும் ஏறிவரும் விலைவாசி, எரிபொருட்கள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு என பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற நிலையில் இலங்கை மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர்.

அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி அதிபர் மாளிகையில் நுழைந்து போராட்டம் நடத்தினர். இதனால் அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இதையடுத்து பிரதமர் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இடைக்கால அதிபராக செய்லபடுவார் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவசர பிரகனடம் பிறப்பிக்கப்பட்டது.

gotabaya Rajapaksa Resign Srilanka Lanka President

இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து கோத்தபயாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். நேற்று ராஜினாமா அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அறிவிப்பை அவர் வெளியிடாமலே இருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகருக்கு கோத்தபய அனுப்பி உள்ளார்.

Views: - 1632

0

0