இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்கள் திடீரென ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் அடிக்கடி மோதல் ஏற்படும்.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பும், பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களும் இஸ்ரேல் மீது ஆயுத தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுக்கள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி உருக்குலைந்து போயுள்ளது.
மேலும், பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அல் அக்சா பிளோட் என்ற பெயரில் இஸ்ரோல் மீது போர் தொடங்கியுள்ளதாக பாலஸ்தீனிய ஆயுதக்குழு ஹமாஸ் அறிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1710546136778379313மேலும், இஸ்ரேலிய எல்லை நகரங்களில் உள்ள காவல்நிலையங்களை பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.