20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணை தாக்குதல்… இஸ்ரேலில் போர் பதற்றம் ; மக்களை கொன்று குவிக்கும் பாலஸ்தீனிய ஆயுதக்குழு…!!

Author: Babu Lakshmanan
7 October 2023, 1:32 pm
Quick Share

இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்கள் திடீரென ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் அடிக்கடி மோதல் ஏற்படும்.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பும், பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களும் இஸ்ரேல் மீது ஆயுத தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுக்கள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி உருக்குலைந்து போயுள்ளது.
மேலும், பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடும் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அல் அக்சா பிளோட் என்ற பெயரில் இஸ்ரோல் மீது போர் தொடங்கியுள்ளதாக பாலஸ்தீனிய ஆயுதக்குழு ஹமாஸ் அறிவித்துள்ளது.

https://twitter.com/i/status/1710546136778379313மேலும், இஸ்ரேலிய எல்லை நகரங்களில் உள்ள காவல்நிலையங்களை பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 493

0

0