39 தொகுதிகளுக்கும் லிஸ்ட் எடுங்க… அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு : தமிழகத்தில் டாப் கியரில் பாஜக!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 2:19 pm
BJP - Udpatenews360
Quick Share

39 தொகுதிகளுக்கும் லிஸ்ட் எடுங்க… பாஜக போட்ட உத்தரவு : தமிழகத்தில் டாப் கியரில் பாஜக!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது. இதையடுத்து அண்ணாமலையை டெல்லி வர சொல்லி பாஜக மேலிடம் ஆர்டர் போட்டது.

அங்கு சென்ற அண்ணாமலை அமித்ஷா, ஜேபி நட்டா, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். பின்னர் இரு நாட்கள் கழித்து சென்னை திரும்பிய அவர், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு ஆலோசனை கூறினார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி வாரியாக பாஜகவிற்கு பொறுப்பாளர்களை நியமிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்களாம்.

டுத்த வாரத்திற்குள் 39 தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பாஜக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. பாஜக தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அடையாளம் காண திட்டமிட்டுள்ளது ஏன் என்ற கேள்விகளும் சிறகடிக்கின்றன.

ஒருவேளை எதிர்பார்க்கும் கூட்டணி அமையாவிட்டாலும் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது என்பதற்கான ‘பிளான் பி’ தான் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கச் சொல்லியிருப்பதற்கான காரணம் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.

Views: - 298

0

0