மொராக்கோவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 296 பேர் உயிரிழந்தனர்.
வட் ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மாரகேஷ் பகுதியில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மேலும் உயரமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், கட்டிட இடிபாடுகளில் மக்கள் சிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுவரையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரலாற்று சிறப்பு மிக்க மொராக்கோ சிவப்பு சுவர்கள் சேதமடைந்தது குறித்து அந்த நாட்டு மக்கள் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே, மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.