மொராக்கோவில் பெய்த எதிர்பாராத கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள பல இடங்களில் நீர் நிரம்பி காணப்படுகிறது.
மொராக்கோ: உலகப் புகழ் பெற்ற சஹாரா பாலைவனம் மொராக்கோவில் உள்ளது. இந்த இடம் எப்போதும் வெப்பம் நிறைந்து நீர் ஆதாரங்கள் இன்றியே காணப்படுகிறது. மேலும், புவி வெப்பமயமாதலால் சஹாரா பாலைவனம் மிகப்பெரிய சேதத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மொராக்கோ வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக சஹாரா பாலைவனத்தில் அளவுக்கு அதிகமான கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சஹாரா பாலைவனத்தின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன. அதிலும், அங்குள்ள டாகோனிட் என்ற கிராமத்தில் 24 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மேலும், ஜகொரா மற்றும் டாடா ஆகிய இடங்களுக்கு இடையே அரை நூற்றாண்டாக வறண்டு கிடந்த இரிகி ஏரி நிரம்பியுள்ளதாக நாசாவின் சேட்டிலைட் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த மாதம் வந்த வெள்ளத்தால் மொரோக்கோவில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சஹாரா பாலைவனம் மேற்கு ஆப்பிரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் 9 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு நீண்டு காணப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.