178 வருஷத்திற்குப் பின் நடைபெறும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இதனை இந்தியர்கள் காண முடியாது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணம் இன்று இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 02.25 மணி வரை நடக்க இருக்கிறது. இது மிகப்பெரிய கிரகணம் என்பதால், இதனை வளைய கிரகணம் அல்லது நெருப்பு கிரகண வளையம் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த அற்புத நிகழ்வை காண முடியும் என்று வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓஹியோவில், சந்திரன் சூரியனை மேலும் மேலும் மறைக்கத் தொடங்கும் போது, மரங்களின் கீழ் நிழல்கள் மாறுவதைக் காணக்கூடியவாறு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
பகலில் நடக்கும் இந்த நிகழ்வின் போது, வெப்பமும், குளிர்மையும் சேர்ந்த ஒரு வித்தியாசமான சூழல் நிலவும் என்றும், இந்த மாற்றத்தால் விலங்குகள் வித்தியாசமாக செயல்படும் என்றும் வானியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
கதிர்வீச்சுத் தாக்கம் அதிகரித்திருப்பதனால் இந்த கிரகணத்தை சாதாரண வெற்றுக்கண்ணால் பார்வையிடுவதும், சன்கிளாஸ்களைப் பயன்படுத்துவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எனவே, உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கிரகணத்தை பார்வையிட வேண்டும் என் எச்சரிக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.