178 வருஷத்திற்குப் பின் நடைபெறும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இதனை இந்தியர்கள் காண முடியாது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணம் இன்று இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 02.25 மணி வரை நடக்க இருக்கிறது. இது மிகப்பெரிய கிரகணம் என்பதால், இதனை வளைய கிரகணம் அல்லது நெருப்பு கிரகண வளையம் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த அற்புத நிகழ்வை காண முடியும் என்று வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓஹியோவில், சந்திரன் சூரியனை மேலும் மேலும் மறைக்கத் தொடங்கும் போது, மரங்களின் கீழ் நிழல்கள் மாறுவதைக் காணக்கூடியவாறு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
பகலில் நடக்கும் இந்த நிகழ்வின் போது, வெப்பமும், குளிர்மையும் சேர்ந்த ஒரு வித்தியாசமான சூழல் நிலவும் என்றும், இந்த மாற்றத்தால் விலங்குகள் வித்தியாசமாக செயல்படும் என்றும் வானியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
கதிர்வீச்சுத் தாக்கம் அதிகரித்திருப்பதனால் இந்த கிரகணத்தை சாதாரண வெற்றுக்கண்ணால் பார்வையிடுவதும், சன்கிளாஸ்களைப் பயன்படுத்துவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எனவே, உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கிரகணத்தை பார்வையிட வேண்டும் என் எச்சரிக்கின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.