சிங்கமுத்து, வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
சென்னை: தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சிங்கமுத்து, யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டி அளித்து உள்ளார்.
அந்தப் பேட்டிகளில் என்னைப் பற்றி துளி கூட உண்மையில்லாத, பல பொய்களைக் கூறி, என்னைத் தரக்குறைவாகவும் பேசி உள்ளார். எனவே, சிங்கமுத்து 5 கோடி ரூபாயை எனக்கு நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிங்கமுத்து தரப்பில், தான் அவதூறாகப் பேசியதாக மட்டுமே வடிவேலு கூறியிருக்கிறாரே தவிர, எந்த மாதிரி அவதூறு என்று குறிப்பிடவில்லை என்றும், தான் திரைத்துறை சார்ந்த கருத்து மட்டுமே தெரிவித்ததாகவும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: கோர்ட் படியேறும் திரிஷா… சூர்யா படப்பிடிப்பில் என்ன நடந்தது?
இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று (டிச.06) விசாரணைக்கு வந்தது. அப்போது வடிவேலு தரப்பில், “இந்த வழக்கை தாங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. ஆனால், அதன் பிறகும் கூட யூடியூபில் சிங்கமுத்து தரப்பில் தங்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார்கள்” எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து சிங்கமுத்து தரப்பில், “அப்படி எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. தங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்” என்றும் வாதிடப்பட்டது.
இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வருகிற டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், அதுவரை சிங்கமுத்து, வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே சிங்கமுத்து கூறியது யூடியூபில் இருப்பதால் அதனை நீக்க அந்தந்தச் சேனலுக்கு கடிதம் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.