சினி அப்டேட்ஸ்

நல்ல நண்பர்களாக இருந்தோம்… இப்போ பேசுறதே இல்ல – விஜய் குறித்து ஜூனியர் NTR பேட்டி!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்திலிருந்து வரும் நடிகர் விஜய் கடைசியாக கோட் திரைப்படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி திரைப்படம். இதை அடுத்து அவர் சினிமா பக்கமே திரும்பாமல் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். மும்முரமாக அதற்கான வேலைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய் .

நடிகர் விஜய்யின் நடனத்திற்கு ஏகப்பட்ட கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ரசிகர்களையும் தாண்டி பிரபலங்கள் நட்சத்திர நடிகர்கள் பலரும் விஜய்யின் நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் ஸ்டார் ஹீரோவான ஜூனியர் என்டிஆர் நான் விஜய்யின் நடனத்திற்கு தீவிரமான ரசிகன் என கூறி இருக்கிறார் .

இதையும் படியுங்கள் :16 வருட வாழ்க்கை… கணவர் குறித்து கண்கலங்கி பேசிய நீலிமா ராணி – வீடியோ!

சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி அவர் விஜய்யின் நடனம் என்பதே தனித்துவம் தான். நடனம் என்பது மிக அழகான ஒரு விஷயம் அதை சண்டை போடுவது போல ஜிம்னாஸ்டிக் போலவோ செய்யவே கூடாது.

இயல்பாக ஆட வேண்டும். அதை நடிகர் விஜய் சிறப்பாக செய்து வருகிறார். அவரது நடனத்திற்கு நான் மிகப்பெரிய ஃபேன். நாங்கள் முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம். அடிக்கடி பேசிக் கொள்வோம் ஆனால், சமீப ஆண்டுகளாக எங்களுக்குள் எந்த ஒரு தொடர்பும் இல்லை என வருத்தத்தோடு தெரிவித்தார் ஜூனியர் என்டிஆர்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.