Categories: தமிழகம்

பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி RAID : போட்டுக் கொடுத்த திமுக? தேர்தல் பறக்கும் படைக்கு காத்திருந்த TWIST!!

பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி RAID : போட்டுக் கொடுத்த திமுக? தேர்தல் பறக்கும் படைக்கு காத்திருந்த TWIST!!

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் பாஜக நிர்வாகி ஓ பி சி அணி மாநில செயலாளர் கே ஆர் வெங்கடேஷ் வீட்டில் மாதவரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே அவர் மீது ஆளும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு அடிக்கடி அவரது வீட்டில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் மத்திய சென்னை பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் வினோஜ் பி செல்வம் அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என புகார் தெரிவித்ததை அடுத்து அவரது வீட்டில் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: மன்சூர் அலிகானுக்கு என்ன ஆச்சு? ICU பிரிவில் அனுமதி.. வேலூரில் இருந்து சென்னை மாற்றம்!!

அங்கு எதுவும் கிடைக்கப்பெறாததால் ஏமாற்றத்துடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்றனர். கே ஆர் வெங்கடேசன் உறவினர் பாடியநல்லூர் பார்த்திபன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் மூலம் அணுகிய நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதை சுட்டிக்காட்டி அவருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் மறுத்த நிலையில் தற்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது வீட்டில் பரிசு பொருட்கள் பணம் பதுக்கி இருக்கலாம் என்கிற அடிப்படையில் சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல தொழிலதிபரான கே ஆர் வெங்கடேசன் கல்வி அறக்கட்டளைகளை நடத்தி வருவதுடன் தொடர்ந்து பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வருவதால் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக இது போன்று வேண்டுமென்று பொய்யான புகார்களை ஆளும் கட்சியினர் தெரிவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.