தமிழகம்

தண்ணீர் தொட்டியில் தத்தளித்த மகன்.. பதறிய தாயுடன் 3 பேர் பலியான சோகம்!

நாமக்கல்லில், தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு மகன்களைக் காப்பாற்ற முயன்ற தாயும் சேர்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்: நாமக்கல் அடுத்த போதுப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவருக்கு யாத்விக் (3) மற்றும் 11 மாத குழந்தையான நிதின் ஆதித்யா ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், இன்று நிலத்தடி நீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் இந்துமதி தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்துள்ளார்.

மேலும், தண்ணீர் நிரம்பினால் தெரிந்து கொள்வதற்காக, அந்தத் தொட்டியை மூடாமல் மற்ற வேலைகளைப் பார்த்து வந்துள்ளார். அப்போது, அந்த தொட்டியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 11 மாதக் குழந்தையான நிதின் ஆதித்யா, தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த யாத்விக், தனது தம்பியின் கையைப் பிடித்து மேலே இழுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அவரும் உள்ளே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், தொட்டிக்குள் தனது இரண்டு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், சற்றும் யோசிக்காமல் அவரும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் குதித்துள்ளார். ஆனால், தண்ணீர் தொட்டியில் நீர் நிரம்பியதால், தாய், இரு மகன்கள் என மூன்று பேரும் மூச்சுத்திணறி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: செல்போனால் அலறித் துடித்த முதியவர்.. ஒரே செயலில் சிதறியது எப்படி?

பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

4 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

4 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

5 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

6 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

6 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

7 hours ago

This website uses cookies.