சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வேட்பாளர்கள் பெயர் மலையாளத்தில் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், தாளவாடி மலைப்பகுதி உள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களுடைய சின்னம் குறித்து விவரங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கும்.
மேலும் படிக்க: அதிக வாக்குப்பதிவு மகிழ்ச்சியே.. செல்லுமிடமெல்லாம் வரவேற்பு : நெகிழ்ச்சியில் சௌமியா அன்புமணி!
வழக்கமாக, தமிழ் மொழியில் அச்சிட்டு ஒட்டப்படும் இந்த போஸ்டரில், மலையாள மொழியில் அச்சிடப்பட்ட வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்தின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த வாக்காளர்கள் அதனை படிக்க முடியாமல் என்ன செய்வது என்று திகைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, வாக்குப்பதிவு மையத்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் பெயர்களை மலையாள மொழிக்கு அருகிலேயே, தமிழில் எழுதினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.