மனைவியை கொலை செய்த கணவர் குண்டர் சட்டத்தில் கைது : ஆட்சியர் அதிரடி உத்தரவு

Author: kavin kumar
28 February 2022, 7:26 pm

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே மனைவியை கொலை செய்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்த முதலூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த 12.01.2022-ந் தேதி தனது வீட்டின் மாடியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் திருக்கோவிலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், இனி வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும்,இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் மேற்படி குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?