இது பகல் கனவு பட்ஜெட்… பழைய ரூ.1,000 வாக்குறுதி போல் ஆகிவிடக்கூடாது.. மாணவிகளின் கல்வி முக்கியம் : அண்ணாமலை கிண்டல்..!!

Author: Babu Lakshmanan
18 March 2022, 3:45 pm

சென்னை : அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதாவது, தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும். சென்னையில் மழை, வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு. பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அரசு பள்ளி மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

தமிழக அரசின் இந்த பட்ஜெட்டிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்

  1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது
  2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை
  3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ₹1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்! ஆனால் இது ‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • sikandar movie producer decided to claim 90 crores in insurance 90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?