இளநீர் விற்பனை செய்த பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற குரங்கு : மரத்துக்கு மரம் தாவி சேட்டை.. புதுச்சேரியில் ருசிகர சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 3:44 pm

புதுச்சேரி : இளநீர் விற்பனை செய்த பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற குரங்க, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கீழே போட்டது.

புதுச்சேரி உழவர் சந்தை அருகே இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த பெண் செல் பேசிவிட்டு போனை கீழே வைத்தார். அருகில் இருந்த மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்த குரங்கு செல்போனை வாயில் கைவிக்கொண்டு மரத்தில் ஏறியது. இதை பார்த அருகில் இருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். மேலும் அந்த போனுக்கு தொடர்ந்து கால் செய்த போது குரங்கு கையில் வைத்து விளை

விளையாடியும் மரத்துக்கு மரம் தாவியது நீண்ட போராட்டத்திற்கு பிறகு குரங்கு ஒரு வழியாக செல்போனை தூக்கி எரிந்தது. அது சாதாரண பட்டன்போன் என்பதால் அது உடையாமல் தப்பித்தது

  • director ram movie paranthu po getting positive reviewsராம் படம் மாதிரியே இல்ல, நல்லா இருக்கு?- இது பாராட்டா? விமர்சனமா? குழப்பத்தை ஏற்படுத்தும் ரசிகர்கள்!