பெண் சகவாசத்துக்காக அடித்துக்கொண்ட நண்பர்கள் : சக நண்பனையே குத்திக் கொலை செய்த ஓட்டுநர்.. திருச்சி அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 6:25 pm
Friend Murder - Updatenews360
Quick Share

திருச்சி : பெண் சகவாசத்தால் வேன் ஓட்டுநர் வீட்டு வாசலில் குத்தி கொலை செய்த சக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் கக்கன் காலனி சேர்ந்த அசோகன் மகன் சக்திகுமார் (வயது 34) இவர் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இதே போல் திருவெறும்பூர் காமராஜர் நகர், சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துப்பாண்டி (வயது 32) இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே பெண் தொடர்பான தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துப்பாண்டி சக்திகுமாரின் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சக்திகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சக்திகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 574

0

0