போலீஸ் வாகனங்களை வைத்து REELS செய்தால் JAIL-தான்… தேவர் ஜெயந்தி நினைவு நாள் விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 1:34 pm

தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு நாள் விழாக்களுக்கு செல்லும் போது காவல்துறை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி சமூகவலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தேவர் ஜெயந்தி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர் பேசியபோது :- கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு நாளின் போது காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறிய வாகனங்கள் கண்காணிப்பு கேமராவின் அடிப்படையில் 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 இருச்சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வருகிறது. தேவர் குருபூஜைக்கு மதுரை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 வாடகை வாகனங்கள் மூலமாக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தேவர் ஜெயந்தி & மருதுபாண்டியர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொள்ள செல்பவர்கள் மதுபோதை, அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனரின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். மேலும், விழாவிற்கு செல்லும் போது காவல்துறை வாகனங்களை தடுத்து நிறுத்தி இடையூறு செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் எச்சரித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!