பாரில் துப்பாக்கியால் சுட்டு கெத்து காட்ட நினைத்த நண்பர்கள்… மதுபோதையில் செய்த சேட்டை… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
27 October 2022, 5:36 pm

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் ஹோட்டல் பாரில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பு ஏற்படுத்திய இருவர் கைது பதப்பதைக்கும் சி சி டிவி காட்சிகள் வெளியாகி உள்ளது!!

கேரள மாநிலம் கொச்சி குண்டனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் பாரில், நேற்று கொல்லம் பகுதியைச் சேர்ந்த ரோஜன் மற்றும் அவரது நண்பர் ஆன வழக்கறிஞர் ஹெரால்ட் ஆகியோர் மது அருந்த சென்றனர்.

அங்கு மது அருந்திய பின்பு அங்கிருந்து புறப்படும் போது, திடீரென பாரின் சுவரை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். ஆனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் திடீரென துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து இவர்களை தேடி வந்த போலீஸ் இன்று இருவரையும் கைது செய்ததோடு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://player.vimeo.com/video/764534485?h=b2d2e49b9d&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!