ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்? புதிய சர்ச்சை… அம்பலமானது ரகசியம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 12:44 pm

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள முக்கிய 5 உறுப்பினர்கள்தான் ஷிவ் சுந்தர் தாஸ், சுரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் ஆவார்கள். இவர்களுக்கு தலைமை தாங்குபவர் சேத்தன் சர்மா.

20 ஓவர் உலக கோப்பையில் மோசமான தோல்வியின் காரணமாக கடும் விமர்சனங்களை எழுந்ததை அடுத்து சேத்தன் சர்மா தலைமையிலான குழு கலைக்கபட்டது.

பின்னர் மீண்டும் அவர் தலைமையில் புதிய குழு ஒன்றை பிசிசிஐ கடந்த ஜனவரி மாதத்தில் அமைத்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா மீது நேற்று ஜீ மீடியாவின் உளவு கேமராவால் ரகசியமாக சேத்தன் சர்மா கூறியவற்றை படம் பிடித்தது.

அதில் இந்திய அணியில் போலி பிட்னஸ் ஊசி பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.

மேலும் சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம் மற்றும் அணியில் இருந்து வீரர்களை நீக்கியதற்கு யார் காரணம் என்பது உள்ளிட்ட முன்னர் மறைக்கப்பட்ட உண்மைகளை சர்மா வெளிப்படுத்தினார்.

போலியான உடற்தகுதிகளை பெற ஊசிகளைப் பயன்படுத்துவதாகவும், முக்கிய வீரர்களுக்கு ஊசிமூலம் ஏற்படுத்தபட்ட உடற்தகுதியை பிசிசிஐ வேண்டுமென்றே கவனிக்கவில்லை என்றும் சர்மா கூறினார்.

இந்த அறிக்கை, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் வாரியத்தின் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாட்டின் பின்னணியில் உள்ள காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற செல்வாக்கு மிக்க வீரர்கள் தலைமை தேர்வாளரை எவ்வாறு மாற்றுகிறார்கள் மற்றும் முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்க திட்டமிடுவதற்கு இடைவேளைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…