18 வயதிலே 2 கருக்கலைப்பு – பாடகி சுஜாதா இப்படிப்பட்டவரா? பல வருடங்களுக்கு பின்னர் கூறிய உண்மை சம்பவம்!

Author: Shree
31 March 2023, 5:45 pm

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான சுஜாதா மோகன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள சுஜாதா 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்ற டாக்டரை திருமணம் செய்துக்கொண்டார்.
அதன் பின்னர் 1986ம் ஆண்டு சுவேதா மோகன் என்ற மகள் பிறந்தார்.

இந்நிலையில் தனது கடந்த கால அனுபவங்களை குறித்து பேட்டி ஒன்றில் கூறிய சுஜாதா மோகன். தன் மகள் ஸ்வேதா பிறப்பதற்கு முன்னர் நான் பாடல் பாடுவதில் பிசியாக அங்கும் இங்கும் அலைந்து வேலை பார்த்தேன். அதனால் இரண்டு குழந்தைகள் கருவிலே கலைந்துவிட்டது. அதன் பிறகு பிறந்தவர் தான் ஸ்வேதா.

அவள் குழந்தையாக இருந்தபோது கூட நான் வேலை வேலை என ஓடியால் சரியாக பார்த்துக்கொள்ளமுடியவில்லை. ஸ்வேதா ஸ்கூல் படிக்கும்போது பள்ளி விழாக்களுக்கு கூட என்னால் போகமுடியாது. அவள் அதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டிருக்கிறாள். அதனால். இப்போது நானும் என் கணவரும் எங்கள் பேத்தியை நன்றாக கவனித்து பார்த்துக்கொள்கிறோம். ஸ்வேதா வெளிநாடுகளுக்கு பாடல் பாட சென்றால் பேத்தியை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகள் எல்லாம் நான் தான் பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!