எல்ஃபின் நிதி நிறுவன மோசடி விவகாரம்… விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது..!!

Author: Babu Lakshmanan
27 May 2023, 1:09 pm

எல்ஃபின் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மன்னார்புரத்தில் எல்ஃபின் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்த நிலையில், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிபதிகளின் உத்தரவுப்படி, எல்ஃபின் நிறுவனம் மீதான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. எல்ஃபின் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!