அந்த மாதிரி காட்சியா?.. ஓட்டம் எடுத்த பிரபல நடிகை அவரே சொன்ன உண்மை..!

Author: Vignesh
14 July 2023, 6:30 pm

கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

priyamani-updatenews360

முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை , நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. பிரியாமணி முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் “சாருலதா” அந்த படமும் தோல்வியில் முடிய தனது மார்க்கெட்டை இழந்தார்.

இதனால் தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத பிரியாமணி தெலுங்கில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார். சில காலமாக ஒரு சில படங்களிலேயே நடித்த பிரியாமணி மலையாளப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் . அதன் பின் இவர் நடித்த FAMILYMAN 2 Web Series முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது .

priyamani-updatenews360

இதனிடையே முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறாராம். இந்த டான்ஸ் சமந்தாவின் ஊ சொல்றியாமாமா பாடலின் நடனத்தையே மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் பிரியாமணி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் தான் படுக்கையறை மற்றும் நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும், அதற்கு முழு காரணம் தன் குடும்பத்தினர் படத்தை பார்ப்பார்கள் படம் பார்க்கும் பொழுது அவர்களின் முகம் சுளிக்கக்கூடாது என்பதற்காகவும், அப்படி நடித்தால் தன் கணவருக்கு தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்று வெளிப்படையாக பிரியாமணி இதனை தெரிவித்துள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?