அரசுப் பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2023, 6:12 pm

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் இருந்து டவுன்ஹால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது.
முருகவேல் என்ற ஓட்டுநர் இப்பேருந்தை ஓட்டி வந்து உள்ளார். இந்நிலையில் வேடப்பட்டி அருகே எதிர் திசையில் மாதம்பட்டி நோக்கி அதி வேகமாக வந்து கொண்டு இருந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தின் போது அவ்வழியே சென்ற பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீதும் பேருந்து மோதி சுப்பிரமணி காயம் அடைந்தார். இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த தேனமநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபிசங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார்.

இதை அடுத்து அப்பகுதி மக்கள் கோபி சங்கர் மற்றும் பழ வியாபாரி சுப்பிரமணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே விபத்து சம்பவம் தொடர்பான அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!