அந்த விஷயத்தில் விஜய் பயந்தாங்கோலி… ஓடவிட்டுட்டாங்க – மனுஷன் அரசியல் எப்படி சமாளிப்பாரு?
Author: Shree1 August 2023, 5:16 pm
![vijay](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/08/vijay-1-1.jpg)
சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/07/vijay-1-12.jpg)
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து மக்கள் சேவையில் இறங்கினர். அதே போல் அண்மையில் விஜய் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடத்தி அரசியல் என்ட்ரி குறித்து பேசி தமிழகம் முழுக்க கவனத்தை ஈர்த்தார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/08/vijay.jpg)
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, விஜய் அரசியலுக்கு வருவது என்பது அவருக்கே உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆம், காரணம், விஜய் பெரிய கூட்டத்தை பார்த்தால் பயந்துவிடுவார். தன் ரசிகர்களே லட்சக்கணக்கில் கூடிவிட்டால் அங்கிருந்து எப்படி பாதுகாப்பாக வெளியேறுவது என படபடத்து போய்விடுவார். அப்படித்தான் பாண்டிசேரியில் ஒரு சம்பவம் நடந்தது.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/08/vijay-.jpg)
தற்போது விஜய்யின் அரசியல் ஆசானாக, அவரது நிழலாக, அவருடைய இன்னொரு மனசாட்சியாக இருக்கும் புஷ்லி ஆனந்தின் மகள் திருமணத்திற்கு விஜய் சென்றிருந்தார். பெரும்பாலும் விஜய் பொது நிகழ்ச்சிகளுக்கு போகவே மாட்டார். ஆனால் அன்று பல முன்னேற்பாடுகளுடன் தான் சென்றார். இருந்தும் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து திணறிப்போன விஜய் சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓடிவந்ததை இன்றுவரை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்கிறார்கள். இப்படி இருக்கிறவர் அரசியல் எப்படி சமாளிப்பார் என்பது கேள்வி குறியாக உள்ளது என செய்யாறு பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
0
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0